Home நாடு கெட்கோ: டத்தோ சகோதரர்கள் விடுதலை

கெட்கோ: டத்தோ சகோதரர்கள் விடுதலை

574
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – நெகிரி செம்பிலான் கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த லோட்டஸ் குழுமத்தைச் சேர்ந்த டத்தோ ரெனா.இராமலிங்கம், ரெனா.துரைசிங்கம் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

கெட்கோ விவகாரத்தில் ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி 69 வயது நபர் ஒருவரை விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைத்த ஊழல் தடுப்பு ஆணையம், அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி இராமலிங்கம், துரைசிங்கம், இருவரையும் விசாரணைக்காகத் தடுத்து வைத்தது.

விசாரணையின்போது, டத்தோ சகோதரர்கள் இருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாகவும், கெட்கோ நிலத்திட்டம் குறித்த தங்களின் தரப்பு விளக்கங்களை ஆணையத்திடம் வழங்கியிருப்பதாகவும் அறியப்படுகிறது.

#TamilSchoolmychoice

கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில் யார் மீதாவது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.