Home நாடு அரசு அலுவலகத்தில் பீர் பாட்டில்கள் வீசிய ஜமால் கைது!

அரசு அலுவலகத்தில் பீர் பாட்டில்கள் வீசிய ஜமால் கைது!

997
0
SHARE
Ad

Jamal Md Yunosகோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலச் செயலக அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை பீர் (மது) பாட்டில்களை வீசி உடைத்த சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யூனோஸ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கும் தகவலில், “அம்னோ கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்புகையில் செகின்சானில் என்னை காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு கைது செய்தனர்”

“நான் தற்போது ஷா ஆலம் காவல்துறைத் தலைமையகத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice