Home இந்தியா கணவரைச் சந்தித்தார் சசிகலா

கணவரைச் சந்தித்தார் சசிகலா

771
0
SHARE
Ad

sasikala-visiting-nadarajan-07102017சென்னை – 5 நாள் தற்காலிக விடுதலையில் சென்னை வந்திருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனது கணவர் நடராஜனை இன்று சனிக்கிழமை மருத்துவமனையில் சென்று சந்தித்தார்.

அவரது 5 நாள் பரோல் எனப்படும் தற்காலிக விடுதலை இன்று முதல் தொடங்குகிறது.

சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து, சிகிச்சை பெற்று வரும் தனது கணவன் நடராஜனைச் சந்தித்த பின்னர் அவர் மீண்டும் தான் தங்கியிருக்கும் தியாகராய நகர் இல்லம் திரும்பினார்.