Home நாடு புக்கிட் அமானில் புதிய பொறுப்பேற்கிறார் அமர் சிங்!

புக்கிட் அமானில் புதிய பொறுப்பேற்கிறார் அமர் சிங்!

960
0
SHARE
Ad

AMAR SINGHகோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் முதல் சீக்கிய காவல்துறைத் தலைமை ஆணையர் என்ற சாதனையைப் படைத்த டத்தோ அமர் சிங், தற்போது புக்கிட் அமான் வர்த்தகக் குற்றங்கள் பிரிவின் இயக்குநராகப் பொறுப்பேற்று மீண்டுமொரு சாதனையைப் படைத்திருக்கிறார்.

பேராக் கிந்தாவைச் சேர்ந்த 59 வயதான அமர் சிங், வரும் சனிக்கிழமையிலிருந்து புதிய பொறுப்பில் அமர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.