Home நாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஷாபி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஷாபி!

863
0
SHARE
Ad

Shafie Apdalகோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் கிராமப்புற மேம்பாட்டு நிதியில் 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், நேற்று வியாழக்கிழமை முன்னாள் அமைச்சரும், சபா வாரிசான் கட்சியின் தலைவருமான ஷாபி அப்டால், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் கைது செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே ஷாபியின் இரத்த அழுத்தம் உயர்ந்ததால், நேற்று இரவே ஷாபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.