Home நாடு தான் ‘குறி’ வைக்கப்பட்டதை பாதிரியார் ரேமண்ட் கோ அறிவார்!

தான் ‘குறி’ வைக்கப்பட்டதை பாதிரியார் ரேமண்ட் கோ அறிவார்!

1058
0
SHARE
Ad

Raymond kohகோலாலம்பூர் – தான் ஒரு குறிவைக்கப்பட்ட ஆள் என்பதை கடத்தப்பட்ட பாதிரியார் ரேமண்ட் கோ  முன்பே அறிந்திருந்தார் என ஹராப்பான் சமூக இயக்குநர் ஸ்ரீராம் கேஎஸ் கோபால ஐயர் தெரிவித்திருக்கிறார்.

கடைசியாக ஜனவரி 8-ம் தேதி, ஷா ஆலமில் தான் ரேமண்ட் கோவைச் சந்தித்ததாகவும், அப்போது, 2011-ல் நடைபெற்ற ஹராப்பான் சமூக விழாவில் ஜாயிஸ் (Selangor Islamic Religious Department) சோதனை நடத்தியதற்குப் பிற்கு தனக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து அவர் புகார் கூறினார் என்றும் கேஎஸ் கோபால ஐயர் சுஹாகாமிடம் (மனித உரிமை ஆணையத்திடம் தெரிவித்தார்.