Home நாடு பினங்கில் வெள்ளம்: உள்துறை அமைச்சர் உதவ வேண்டும் – லிம் உருக்கம்

பினங்கில் வெள்ளம்: உள்துறை அமைச்சர் உதவ வேண்டும் – லிம் உருக்கம்

850
0
SHARE
Ad
lim guang eng-penang flood-monitor-05112017
பினாங்கு மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வருகை தந்த லிம் குவான் எங் வெள்ள நிலைமைகளைப் பார்வையிடுகிறார்.

ஜோர்ஜ் டவுன் – கடந்த இரண்டு நாட்களாக பெய்த புயல் காற்றுடன் கூடிய பெருமழையால் பெரும் பாதிப்பிற்குள்ளான பினாங்கு மாநிலத்திற்கு உதவும் வகையில் உடனடியாக இராணுவ உதவியை வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடிற்கு தாம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

பினாங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது. பத்தடி முதல் பதினைந்து அடிகள் வரை நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன.

lim guan eng-penang flood-05112017
பினாங்கு மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளின் வெள்ள நிலைமைகளை லிம் குவான் எங் பார்வையிடுகிறார்.

வெள்ள நிவாரண மையங்களில் மின் இணைப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இராணுவ உதவியை எங்களுக்கு உடனடியாக வழங்கி உதவக் கோரி தாம் உள்துறை அமைச்சரை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தொடர்புக் கொண்டதாகவும் லிம் குவான் எங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

-க.மு.ஆய்தன்