Home இந்தியா இரட்டை இலைச் சின்னம்: விசாரணை தொடர்கிறது!

இரட்டை இலைச் சின்னம்: விசாரணை தொடர்கிறது!

813
0
SHARE
Ad

aiadmk_symbol-புதுடெல்லி – இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை நேற்று திங்கட்கிழமை முடிவுக்கு வந்து முடிவு தெரியவரும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சசிகலா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்று இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இவ்விசாரணை பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியினரின் வாதங்கள் செவிமெடுக்கப்படும்.

அதன் பின்னரே, விசாரணையின் முடிவு அறிவிக்கப்படும் என்றும், ஆனால் இறுதித் தீர்ப்பு எப்போது வெளியிடப்படும் என உறுதியாகத் தெரியாது என்றும் தகவல்கள் கூறுகின்றன.