Home நாடு போதைப் பொருள் குற்றச்சாட்டு: ஹூசாம் மூசா மகன் வழக்கு விசாரணை கோரினார்!

போதைப் பொருள் குற்றச்சாட்டு: ஹூசாம் மூசா மகன் வழக்கு விசாரணை கோரினார்!

948
0
SHARE
Ad

Husam Musaகோலாலம்பூர் – அமனா உதவித் தலைவர் ஹூசாம் மூசாவின் மகன் அகமட் சஃபி ஹூசாம், 200 மெத்தாம்பேத்தாமின் போதை மாத்திரைகள் வைத்திருந்தாகக் கடந்த வாரம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கிளந்தான் கோத்தா பாருவில் உள்ள அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அகமது சஃபி ஹூசாம் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து இன்று புதன்கிழமை அகமட் சஃபி சார்பில் வழக்கு விசாரணைக் கோரப்பட்டது.

#TamilSchoolmychoice

அகமட் சஃபி, அபாயகரமான போதை சட்டம் 1952, பிரிவு 39ஏ (1)-ன் கீழ், விசாரணை செய்யப்படவிருக்கிறார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படலாம்.

படம்: நன்றி மலேசியாகினி