Home இந்தியா தினகரன் அணியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் பக்கம் இணைந்தனர்!

தினகரன் அணியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் பக்கம் இணைந்தனர்!

681
0
SHARE
Ad

edapadi palanisamy-tamil nadu cm-featureசென்னை – அதிமுக சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைந்த அணியினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து டிடிவி.தினகரன் அணியிலிருந்து 3 ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் விலகி முதலமைச்சர் அணியில் இணைந்தனர்.

நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோபாலகிருஷ்ணன் ஆகியோரே அந்த மூவராவர். இந்த மூவரும் இன்று திங்கட்கிழமை மாலை முதலமைச்சர் பழனிசாமியின் இல்லம் வந்து அவரைச் சந்தித்தனர்.

சசிகலாவின் மிக நெருக்கமான ஆதரவாளரான நவநீத கிருஷ்ணன் ஒரு வழக்கறிஞர் என்பதோடு, மாநிலங்களவையில் அதிமுக அணியின் தலைவராகவும் விளங்கியவர்.

#TamilSchoolmychoice

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த அணி மாற்றம் தினகரனுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.