Home நாடு மகாதீரின் விருதுகளைத் திரும்பப் பெற சிலாங்கூர் சுல்தான் சம்மதம்! 

மகாதீரின் விருதுகளைத் திரும்பப் பெற சிலாங்கூர் சுல்தான் சம்மதம்! 

829
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புகிஸ் விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தான் தன்னை விமர்சித்ததால் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இரு அரச விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதாக கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில் அந்த இரு விருதுகளையும் மேன்மைதங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா திரும்பப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாக சிலாங்கூர் அரண்மனை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.