Home இந்தியா கரை வேட்டி கட்டுவதில் தினகரன் எடுத்திருக்கும் சபதம்!

கரை வேட்டி கட்டுவதில் தினகரன் எடுத்திருக்கும் சபதம்!

1054
0
SHARE
Ad

TTV Dhinakaranசென்னை – ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டிடிவி.தினகரன் இன்று திங்கட்கிழமை கூடிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் வேட்டி கட்டாமல், பேண்ட் அணிந்து சென்றார்.

2018-ம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு இது முதல் சட்டமன்றக் கூட்டம் என்பதோடு, தமிழக ஆளுநராகப் பதவியேற்றிருக்கும் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்ளும் முதல் கூட்டமும் இதுவாகும்.

#TamilSchoolmychoice

சட்டமன்றத்தில் தினகரனுக்கு எதிர்கட்சி வரிசையில் 148-வது இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தினகரன் ஆதரவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர்கள் சட்டமன்றத்திற்குள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் தினகரன் தனியாளாக அங்கு அமர்ந்திருந்தார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இரட்டை இலைச் சின்னத்தை மீட்ட பின்னரே சட்டமன்றத்திற்கு வேட்டி அணிந்து செல்வேன் என தினகரன் சபதம் எடுத்திருப்பதாய் தெரிவித்தார்.