Home நாடு புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்கிறது சிலாங்கூர் பக்காத்தான்!

புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்கிறது சிலாங்கூர் பக்காத்தான்!

740
0
SHARE
Ad

azmin ali-feature-1ஷா ஆலம் – நாளை புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்வதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது சிலாங்கூர் பக்காத்தான்.

இதற்கான அறிவிப்பை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி வெளியிட்டிருக்கிறார்.

பக்காத்தான் தேசியத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் ஆலோசனைப் படி, அனைத்து விவாதங்களும் இரகசியமாக நடத்தபடும் என்றும் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இது ஒரு நல்ல முன்னேற்றமாக நான் பார்க்கிறேன். நாங்கள் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கவிருக்கிறோம். ஒருமித்த கருத்துடன் பொதுத்தேர்தலில் வெற்றியடையவிருக்கிறோம்” என்று அஸ்மின் அலி கூறியிருக்கிறார்.