Home நாடு அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 17 பேர் பலி!

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 17 பேர் பலி!

706
0
SHARE
Ad

US Gun attackபார்க் லேண்ட், புளோரிடா – நேற்று புதன்கிழமை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், 19 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

மியாமியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பார்க்லாந்தில் உள்ள மார்ஜோரி ஸ்டோன்மேன் டக்லாஸ் உயர்நிலைப் பள்ளியில், நேற்று வன்முறை வெடித்ததில், இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.

நிக்கோலஸ் கிரஸ் என்ற அந்த பள்ளியின் முன்னாள் மாணவரை தற்போது காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது.