Home நாடு 2018 பிரிம் தொகை வழங்கப்படுகிறது

2018 பிரிம் தொகை வழங்கப்படுகிறது

834
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – பொதுமக்களுக்கான அரசாங்க உதவித் தொகையான பிரிம் நிதியின் 2018-ஆம் ஆண்டின் முதல் கட்ட விநியோகம் இன்று திங்கட்கிழமை முதல் தொடங்கும் என நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லா அறிவித்திருக்கிறார்.

இது வழக்கமான அரசாங்க நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாக பிரிம் தொகை விநியோகம் அரசியல் பார்வையாளர்களால் கணிக்கப்படுகிறது.