Home நாடு பெர்காசா சார்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி “சிலாங்கூரை பாதுகாப்போம்” மாநாடு

பெர்காசா சார்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி “சிலாங்கூரை பாதுகாப்போம்” மாநாடு

446
0
SHARE
Ad

Perkasaகோலாலம்பூர், மார்ச் 27 – எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பெர்காசா கட்சின் சார்பாக வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி, “சிலாங்கூரை பாதுகாப்போம்” என்ற பெயரில் மாநாடு நடைபெறவிருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் டத்தோ இப்ராகிம் அலி அறிவித்துள்ளார்.

மேலும் இந்த மாநாட்டில் சுமார் 15,000 முதல் 20,000 மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,இதில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கலந்து கொண்டு மக்கள் முன் உரையாற்றுவார் என்றும் இப்ராஹிம் அலி தெரிவித்துள்ளார்.