Home நாடு கிளந்தானில் மகாதீர் உரை கேட்க திரண்ட மக்கள்

கிளந்தானில் மகாதீர் உரை கேட்க திரண்ட மக்கள்

858
0
SHARE
Ad

கோத்தா பாரு – நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வரும் துன் மகாதீர் கடந்த 2 நாட்களாக கிளந்தான் மாநிலத்தில் பல கூட்டங்களில் கலந்து கொண்டார்.

நேற்று சனிக்கிழமை பாச்சோக் வட்டாரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துன் மகாதீரின் உரைகேட்க திரளான மக்கள் குழுமினர்.

பாச்சோக் மக்களுக்கு தனது டுவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கும் மகாதீர் இன்று பினாங்கு மாநிலத்திற்கு வருகை தருகிறார்.

#TamilSchoolmychoice

ஜசெகவின் பினாங்கு அரசாங்கத்தின் 10-ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மகாதீர் பங்கு கொள்கிறார்.