Home நாடு ஆர்ஓஎஸ் முடிவுக்கு எதிராக பெர்சாத்து மறுஆய்வு மனு!

ஆர்ஓஎஸ் முடிவுக்கு எதிராக பெர்சாத்து மறுஆய்வு மனு!

933
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்சாத்துவை தற்காலிக இரத்து செய்திருக்கும் ஆர்ஓஎஸ் (சங்கப்பதிவகம்) முடிவுக்கு எதிராக அக்கட்சி, நேற்று நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு அளித்திருக்கிறது.

சங்கப்பதிவகச் சட்டம், பிரிவு 14(2) -ன் படி, 14-வது பொதுத்தேர்தலில், போட்டியிடத் தகுதிவாய்ந்த ஒரு கட்சியாகத் தங்களை அனுமதிக்க உத்தரவிடக் கோரி, நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறது.

மேலும், ஆர்ஓஎஸ் பொது இயக்குநர் சூரியாத்தி இப்ராகிம், பெர்சாத்துவை இரத்து செய்வதாக தவறாக அறிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பெர்சாத்து கட்சி, அவருக்கு எதிராக சங்கப்பதவகச் சட்டம் பிரிவு 14 (5)-ன் படி அதிகார துஷ்பிரயோகம் செய்தற்காக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இம்மனுவை பெர்சாத்து பொதுச்செயலாளர் ஷாருடின் முகமட் சாலே நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் அளித்ததாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.