Home உலகம் முன்னாள் தென்கொரிய அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை!

முன்னாள் தென்கொரிய அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை!

897
0
SHARE
Ad

சியோல் – ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹைக்கு, இன்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

சியோல் மத்திய வட்டார நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரணை செய்த 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், பார்க் மீதான 12-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக பார்க், மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பார்க்குக்கு எதிராக வழங்கப்பட்ட இத்தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஏராளமான ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.