Home இந்தியா ஆளுநர் பன்வாரிலால் பதவி விலக வேண்டும் – வைகோ வலியுறுத்து!

ஆளுநர் பன்வாரிலால் பதவி விலக வேண்டும் – வைகோ வலியுறுத்து!

888
0
SHARE
Ad

சென்னை – அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில், தமிழக ஆளுநர் மீது சந்தேகம் எழுந்திருப்பதால், அவர் பதவி விலக வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும், நிர்மலா தேவி வழக்கில் அரச விசாரணை மீது நம்பிக்கை இல்லையென்றும், உயர்நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வைகோ தெரிவித்திருக்கிறார்.

அதேவேளையில், பல்வேறு புகார்களுக்கு ஆளாகியிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநராக நீடிப்பது அவமானம் என்றும் வைகோ குறிப்பிட்டிருக்கிறார்.