Home நாடு பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

991
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவில் சிறந்த நிலையில் உருவாக்கும் முயற்சியில் தித்தியான் டிஜிட்டல் எனும் திட்டத்தை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் & மலேசிய சமூக கல்வி அறவாரியமும் 2009 ஆண்டு தொடங்கி வெற்றிநடை போட்டு வருகின்றனர்.

இத்திட்டத்தின் வழி மாணவர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவை மேலும் மேலோங்கச் செய்யவும், புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்பு திறனறிவை (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. அதை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் கடந்த 4 வருடங்களாக தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியை வழிநடத்தி வருகின்றனர். இப்போட்டியின்வழி மாணவர்களின் படைபாற்றல் திறனையும், உறுவாக்கத் திறனையும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனையும் மேலோங்கச் செய்ய வழிவகுக்கின்றது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு பினாங்கு மாநில நிலையிலான புதிர்ப்போட்டியில் பினாங்கிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளியும் கலந்துக் கொண்டது சிறப்புக்குறியது. நான்காவது வருடமாக நடத்தப்படும் இப்போட்டியில் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் சேர்ந்த அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்துக் கொண்டது இதுவே முதன்முறை. இம்மாநிலம் போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளும் இப்போட்டிகளில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இப்போட்டிற்கு மைநாடி அறவாரியமும், இத்திட்டத்திற்கு செடிக் (SEDIC) அமைப்பும் பேருதவிப் புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி,

நேற்று 05-05-2018 (சனிக்கிழமை) ஈப்போ இந்து பரிபாலன சபா மண்டபத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மலேசிய பள்ளிகளின் ஆய்நர் சாய் கிருஷ்ணன் முனுசாமி சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார். அவர் தம் உரையில், இவ்வகையான போட்டிகளில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் கலந்துக் கொண்டு மேன்மேலும் நன்மை அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், காலத்தின் கட்டாயத்தையும் விவரித்துக் கூறினார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும், தொடர்ந்து சிறந்ததொரு பணியைச் செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எதிர்காலத்தில் தொழில்துறையில் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப்  பெற்ற பள்ளிகள்:

* மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 15 நிலை வெற்றியாளர்கள்,

தேசிய நிலை போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.