Home தேர்தல்-14 “அன்வார் இப்ராகிமுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” – ராய்ஸ் யாத்திம் கூறுகிறார்

“அன்வார் இப்ராகிமுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” – ராய்ஸ் யாத்திம் கூறுகிறார்

809
0
SHARE
Ad

சிரம்பான் – திங்கட்கிழமை (7 மே) நெகிரி செம்பிலானில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம், நாம் அனைவரும் அன்வார் இப்ராகிமுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என்றும் அவர் இல்லை என்றால் இன்றைக்கு நஜிப்பை எதிர்த்துப் போராட பிகேஆர் கட்சியும் இருந்திருக்கப்போவதில்லை, பக்காத்தான் கூட்டணியும் இருந்திருக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

அவரது தியாகங்களை நாம் மறந்து விடக் கூடாது என்று கூறிய ராய்ஸ் யாத்திம் இன்னும் 3 வாரங்களில் அன்வார் விடுதலையாகி வெளிவரும்போது, அவரை  நாம் அனைவரும் திரண்டு வந்து வரவேற்க வேண்டும் என்றும் கூறினார்.

மலாய்க்காரர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், அன்வாரின் தியாகங்களுக்காக மலாய்க்காரர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் ராய்ஸ் தனது உரையில் கூறினார்.

#TamilSchoolmychoice

மகாதீர் – அன்வார் இணைந்த கூட்டணிதான் மலேசியாவை வழிநடத்த சிறந்த தலைமைத்துவம் என்றும் பிபிசி ஊடகம் தெரிவித்திருப்பதையும் ராய்ஸ் கூட்டத்தினருக்குச் சுட்டிக் காட்டினார்.