Home தேர்தல்-14 மகாதீருக்கு நோபல் பரிசு – ஆதரவு 69 ஆயிரமாக அதிகரித்தது

மகாதீருக்கு நோபல் பரிசு – ஆதரவு 69 ஆயிரமாக அதிகரித்தது

1634
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் மகாதீருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற இணையம் வழியான மனு நோபல் பரிசளிப்புக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட ஆதரவு பெருகி வருகிறது.

இதுவரையில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மகாதீருக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசுகளின் வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு துன் மகாதீருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற இணையம் வழியான கோரிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மாற்றம் விரும்புவர்களுக்கான இணையத் தளம் சேஞ்ச் – Change.org. இந்தத் தளத்தில் பல்வேறு அம்சங்களில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவு பொதுமக்களிடம் கோரப்படும்.

அந்த வகையில் மகாதீருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென அலெக்சாண்டிரியா அபிஷேகம் என்ற பெண்மணி தனது கோரிக்கை மனுவைப் பதிவு செய்ய இதுவரையில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.

நீங்களும் கையெழுத்திட விரும்பினால் அதற்கான இணைப்பு பின்வருமாறு:

https://www.change.org/p/nobel-foundation-tun-dr-mahathir-bin-mohamad-nomination-for-the-nobel-peace-prize-2018?pt=AVBldGl0aW9uAOOzyQAAAAAAWwqSk%2BQ%2FGjpkMjFlMTE0Zg%3D%3D&source_location=discover_feed