Home நாடு புதன்கிழமை சரணடைவேன் – ஜமால் யூனுஸ் அறிவிப்பு!

புதன்கிழமை சரணடைவேன் – ஜமால் யூனுஸ் அறிவிப்பு!

890
0
SHARE
Ad
ஜமால் யூனுஸ் (கோப்புப் படம்)

கோலாலம்பூர் – நாளை புதன்கிழமை மதியம் 2 மணியளவில் அம்பாங் காவல்துறைத் தலைமையகத்தில் தான் சரணடையவிருப்பதாக சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் அறிவித்திருக்கிறார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து, பிணை வழங்குவதற்கு முன்னர் தான் தப்பித்து ஓடியதாகக் கூறப்படுவது குறித்து தன்னிலை விளக்கமளிக்கவிருப்பதாகவும் ஜமால் யூனுஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் காவல்துறையிடமிருந்து தப்பித்து ஓடவில்லை. நான் முன்பே கூறியது போல் ஏதோ தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை சரி செய்ய நான் காவல் நிலையம் செல்வேன்” என ஜமால் யூனுஸ் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி மதுபான கண்ணாடிப் போத்தல்களை சிலாங்கூர் மாநில தலைமைச் செயலகத்தின் முன் போட்டு உடைத்தது – மற்றும் தனது கைத்துப்பாக்கியை புகைப்படத்தின் வழி காண்பித்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 48 வயதான ஜமால் யூனுஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அம்பாங் புத்திரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீது மே 26-ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 3 ஆயிரம் ரிங்கிட் பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பிணை வழங்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த தருணத்தில் அவர் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து நழுவி தப்பித்து விட்டார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.