Home நாடு பிகேஆர் தலைவராக அன்வார் பதவி ஏற்க வேண்டும் – சம்சுல் கருத்து!

பிகேஆர் தலைவராக அன்வார் பதவி ஏற்க வேண்டும் – சம்சுல் கருத்து!

1058
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொது மன்னிப்புக் கிடைத்து அவர் விடுதலையாகிவிட்டார். இனியும் அவர் பிகேஆர் ஆலோசகராகச் செயல்படத் தேவையில்லை. அன்வார் பிகேஆர் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என சம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் தெரிவித்திருக்கிறார்.

“வரும் கட்சித் தேர்தலில் அன்வார் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என நான் நம்புகின்றேன்.

“இனி ஆலோசகர் பதவி தேவையில்லை. அன்வாருக்காக தான் கட்சியில் அப்பதவி உருவாக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

“இப்போது நாங்கள் தொழிலுக்கு வந்துவிட்டோம். எனவே அன்வார் எங்களது குரலுக்கு செவி சாய்ப்பார் என நம்புகின்றேன். அதாவது பெரும்பான்மையானவர்களின் குரலுக்கு.

“ஆலோசகர் பதவியை உடனடியாக நீக்கிவிட்டால் அவர் மீண்டும் கட்சியின் தலைவராகப் பதவி ஏற்கலாம்” என பிகேஆர் உதவித் தலைவர் சம்சுல் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.