Home நாடு உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை – குலசேகரன் அறிவிப்பு!

உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை – குலசேகரன் அறிவிப்பு!

3273
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அரசாங்கம் தடை விதிப்பதாக மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்திருக்கிறார்.

எனினும், அனைத்து உணவகங்களுக்கும் இவ்வாண்டு இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்குள் அனைத்து உணவகங்களிலும் மலேசியர்களைப் பணியில் அமர்த்தும் படியும் குலசேகரன் கூறியிருக்கிறார்.

இப்புதியக் கட்டுப்பாடு, வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் குலசேகரன் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“எனவே, உணவகங்களில் இனி நமக்கு உள்ளூர் சமயல்கலைஞர்கள் தான் சமைக்க வேண்டும். அதில் எந்த ஒரு சமரசமும் கிடையாது. வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையில் உங்களுக்கு கால அவகாசம் வழங்குகிறோம். நீங்கள் செய்யவில்லை என்றால், எங்களால் உங்களுக்கு உதவ முடியாது” என்று குலசேகரன் தெரிவித்திருக்கிறார்.