Home உலகம் 1-1: ஈரானுடன் சமநிலை – 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல்

1-1: ஈரானுடன் சமநிலை – 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல்

921
0
SHARE
Ad

மாஸ்கோ – உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற ‘பி’ பிரிவுக்கான போர்ச்சுகல் – ஈரான் இடையிலான ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே தலா 1 கோல் மட்டுமே அடித்து சமநிலை கண்டன.

மலேசிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘பி’ பிரிவில் போர்ச்சுகல் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது.

#TamilSchoolmychoice

‘பி’ பிரிவில் ஸ்பெயின் 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது.

போர்ச்சுகலுடன் சமநிலை கண்ட காரணத்தால் ஈரான் போட்டிகளிலிருந்து வெளியேறுகின்றது.

இதே பிரிவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாடான மொரோக்கோவும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.