Home உலகம் 4-3 பினால்டி கோல்களில் இங்கிலாந்து வெற்றி

4-3 பினால்டி கோல்களில் இங்கிலாந்து வெற்றி

915
0
SHARE
Ad

மாஸ்கோ – (அதிகாலை 4.54 நிலவரம்) உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற இங்கிலாந்து, கொலம்பியா இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் 4-3 பினால்டி கோல்களில் இங்கிலாந்து கொலம்பியாவைத் தோற்கடித்து கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.

முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.

#TamilSchoolmychoice

இரண்டாவது பாதி ஆட்டத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி இங்கிலாந்து குழுவின் தலைவர் (கேப்டன்) கேன் ஒரு கோலைப் போட்டார்.

ஆட்டம் முழுவதும் கொலம்பியா விளையாட்டாளர்களுக்கு  நிறைய அளவில் மஞ்சள் நிற எச்சரிக்கை அட்டைகள் காட்டப்பட்டன.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 90 நிமிட நேர ஆட்டம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களில் கொலம்பியா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைப் படுத்தியது. இதனைத் தொடர்ந்து 30 நிமிட நேர நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அந்தக் கூடுதல் நேரத்திலும் இரு குழுக்களும் வெற்றிக்காக கடும் போராட்டம் நடத்தினாலும் கோல் அடிக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து பினால்டிகள் மூலம் வெற்றியாளரை நிர்ணயிக்கும் வகையில் நடைபெற்ற ஆட்டத்தில் 4-3 கோல் எண்ணிக்கையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.