Home நாடு செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புகிறார் மொகிதின்

செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புகிறார் மொகிதின்

587
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஏறத்தாழ ஒரு மாத காலம் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சித் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் நாடு திரும்பியுள்ளார். அவர் கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்த புகைப்படத்தை (மேலே) அவரது பத்திரிக்கைச் செயலாளர் ஹபிஸ் அப்துல் ஹலிம் வெளியிட்டுள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 14) பாகோ நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்றும் அதைத் தொடர்ந்து சில கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அவருக்கு இன்னும் தொடர் சிகிச்சை வழங்கப்படுவதாலும், இன்னும் முழுமையாக அவர் குணமடைந்து விடவில்லை என்பதாலும் அவரது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் குறைவாகவே இருக்கும்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்த மொகிதின் யாசின்