Home நாடு சிவப்பு அடையாள அட்டை: இந்திய சமுதாயப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு

சிவப்பு அடையாள அட்டை: இந்திய சமுதாயப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு

1221
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – 60 வயதுக்கு மேற்பட்டு சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் மலேசியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக இந்திய சமுதாயம் போராடி வந்த ஒரு பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு காணப்பட்டுள்ளது.

சிவப்பு அடையாள அட்டைப் பிரச்சனையில் இதனால் முழுமையான முடிவு ஏற்பட்டு விடாது என்றாலும், ஒரு முக்கியப் பிரிவினரின் – 60 வயதைத் தாண்டியும் இந்நாட்டின் குடியுரிமை பெற முடியாமல் தவிக்கும் பிரிவினரின் – பிரச்சனைக்கு ஒரு தீர்வு மிக எளிமையாக – நேரடி – முறையில் காணப்பட்டுள்ளது.

இதன் மூலம் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இந்திய சமுதாயத்திற்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.