Home உலகம் இந்திய சுதந்திர தினம் : 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான்

இந்திய சுதந்திர தினம் : 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான்

1080
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் – நாளை புதன்கிழமை கொண்டாடப்படவிருக்கும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. இவர்களில் 27 பேர் மீனவர்களாவர்.

மனித உரிமை விவகாரங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்ற பாகிஸ்தானின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அந்நாட்டின் அரசாங்கப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

இதே போன்று இந்திய அரசாங்கமும் செய்யும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

418 மீனவர்கள் உள்ளிட்ட 470-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைபட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.