Home நாடு பேராக் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாட தேர்வு வழிகாட்டி – சிவநேசன் வழங்குகிறார்

பேராக் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாட தேர்வு வழிகாட்டி – சிவநேசன் வழங்குகிறார்

1107
0
SHARE
Ad

ஈப்போ – பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் இவ்வாண்டு உயர வேண்டும் என்ற நோக்கில் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூல்களை ஆட்சிக் குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் இலவசமாக வழங்குகிறார்.

நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பணிக்குழுவுடன் இணைந்து தான் நடத்துகின்ற பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கத்தில் சிவநேசன் இந்த நூல்களை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைமையாசிரியர்களிடமும், பள்ளிகளின் பிரதிநிதிகளிடமும் இந்த நூல்களை வழங்குவார்.

ஈப்போவிலுள்ள பேராக் டாரூல் ரிட்சுவான்  கட்டடம், பங்குவேட் மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை இந்தக் கருத்தரங்கம் நடைபெறும்.

#TamilSchoolmychoice

இந்தக் கருத்தரங்கத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் சிறப்பு வருகை புரிவார். மேலும் பேராக் மாநிலக் கல்வி இயக்குநர் ஹாஜி மாட் லாஜிம் பின் இட்ரிசும் பேராக் மாநில அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தருவார்கள்.

இந்த கருத்தரங்கில் பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் நிருவாகத் நிருவாகத்  துணைத் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வர்.

நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹரப்பான்) தேர்தல் கொள்கை அறிக்கையின் அடிப்படையில்  பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாடுகளையும், வளர்ச்சியையும் உருவாக்கி, 21ஆம் நூற்றாண்டின் நவீன கல்விச் சூழலுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகளை முன்னேற்றி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.