Home நாடு சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் அபு ஹசான் ஒமார் காலமானார்

சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் அபு ஹசான் ஒமார் காலமானார்

799
0
SHARE
Ad

ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருந்த அபு ஹசான் ஒமார் சனிக்கிழமை (செப்டம்பர் 8) இரவு 8.05 மணியளவில் காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

77 வயதான அவர் மாரடைப்பால் காலமானார் என்றும் அவரது நல்லுடல் ஷா ஆலாம் கோத்தா கமுனிங்கிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்காக கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.