Home கலை உலகம் நடிகர் திலீப் குமார் மீண்டும் மருத்துவமனையில்…

நடிகர் திலீப் குமார் மீண்டும் மருத்துவமனையில்…

1003
0
SHARE
Ad

மும்பை – இந்திப் படவுலகின் பழம் பெரும் நடிகர் திலீப்குமார் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பை லீலாவதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதான அவர் இதற்கு முன்னும் சில முறை உடல் நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கிறார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 7) இரவு திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இருக்கும் நடிகர்களிலேயே வயதால் மிகவும் மூத்தவர் திலீப் குமார் ஆவார். பல புகழ் பெற்ற வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் திலீப்குமாரின் மனைவி சைராபானுவும் ஒரு நடிகையாவார்.