Home நாடு சலவை இயந்திரத்தில் கொல்லப்பட்ட பூனை – இன்னொருவன் மீது குற்றச்சாட்டு

சலவை இயந்திரத்தில் கொல்லப்பட்ட பூனை – இன்னொருவன் மீது குற்றச்சாட்டு

765
0
SHARE
Ad

செலாயாங் – பூனை ஒன்று சலவை இயந்திரத்தில் வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னொரு நபர் நேற்று செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 41 வயதான கே.கணேஷ் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படும் மூன்றாவது நபராவார்.

கணேஷ் 12 ஆயிரம் ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, அவரது அனைத்துலகக் கடப்பிதழும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஏற்கனவே, தொழில்நுட்பத் தொழிலாளி ஏ.மோகன்ராஜ் (வயது 41) என்பவரும், வாடகை வண்டி ஓட்டுநருமான எஸ்.சத்தியா என்பவரும் இதே வழக்கிற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி இந்த மூவரும் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் இவர்கள் மூவரும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஒரு இலட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே அவர்களுக்கு விதிக்கப்படலாம்.