Home நாடு நஜிப்பைத் தொடர்ந்து சாஹிட்டுக்கு எதிராகவும் வழக்காடும் கோபால் ஸ்ரீராம்

நஜிப்பைத் தொடர்ந்து சாஹிட்டுக்கு எதிராகவும் வழக்காடும் கோபால் ஸ்ரீராம்

1194
0
SHARE
Ad

கோலாலம்பூர்- முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராமின் நீண்ட கால சட்டத் துறை பயணத்தில் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தை தற்போது அடைந்திருக்கிறார். முன்னாள் பிரதமருக்கு எதிராகவும், 1 எம்டிபி ஊழல்கள் தொடர்பாகவும் அரசாங்கத்தின் சார்பில் இலவசமாக வழக்காட முன்வந்திருக்கும் கோபால் ஸ்ரீராம் நேற்று முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராகவும் வழக்காடினார்.

இதன் மூலம் அம்னோ – தேசிய முன்னணியின் இரண்டு முக்கியத் தலைவர்களின் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிக்கும் பெரும் பொறுப்பைக் கையிலெடுத்திருக்கிறார் ஸ்ரீராம்.

அம்னோ தேசியத் தலைவரும் முன்னாள் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி மீது நேற்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்)  45 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. குற்றவியல் நம்பிக்கை மோசடி தொடர்பில் 10 குற்றச்சாட்டுகளும், ரிங்கிட்42,083,132-99 இலஞ்சம் பெற்றது தொடர்பில் 8 குற்றச்சாட்டுகளும், ரிங்கிட்72,063,618-15 கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் 27 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் அரசு தரப்பின் நான்கு வழக்கறிஞர்களுக்கு தலைமையேற்கிறார் ஸ்ரீராம்.

சாஹிட் ஹமிடியின் சார்பில் 12 வழக்கறிஞர்கள் ஹிஷாம் தே போ தெக் தலைமையில் அணிவகுத்திருக்கின்றனர்.