Home நாடு எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செல்லியல் குழுமத்தின் வாழ்த்து

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செல்லியல் குழுமத்தின் வாழ்த்து

779
0
SHARE
Ad

SPM EXAM LOGOகோலாலம்பூர் – இன்று நாடு முழுமையிலும் தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, தேர்வுகளில் சிறந்த முறையில் அவர்கள் வெற்றி பெற, செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முறை 2018-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகளுக்கென பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் 421,706 மாணவர்கள் ஆகும். 3,308 தேர்வு மையங்களில் இந்த மாணவர்கள் தேர்வுகளை எழுதவிருக்கின்றனர். இவர்களை 33,361 அதிகாரிகள் மேற்பார்வையிட்டு கண்காணிப்பர்.

இன்று நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகள் டிசம்பர் 13 வரை நடைபெறும்.

#TamilSchoolmychoice

எஸ்பிஎம் தேர்வுகள் குறித்த விவரங்கள் அடங்கிய பெர்னாமாவின் வரைபடத்தைக் கீழே காணலாம்:-

spm-2018-inforgraphics