Home இந்தியா ‘கஜா’ புயல் நவம்பர் 15-இல் தமிழகத்தைத் தாக்கும் – மீட்புக் குழுக்கள் விரைந்தன!

‘கஜா’ புயல் நவம்பர் 15-இல் தமிழகத்தைத் தாக்கும் – மீட்புக் குழுக்கள் விரைந்தன!

1234
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் நவம்பர் 15-ஆம் தேதி ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி, கடலூருக்கும் பாம்பனுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் இதனால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசும் என்றும் தமிழக வானிலை இலாகா அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, 10 தேசிய மீட்புக் குழுக்கள் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படும் இடங்களுக்கு அனுப்பப்பட தயார் நிலையில் உள்ளன.

சில குழுக்கள் சிதம்பரத்திற்கும் சில குழுக்கள் நாகைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.