Home உலகம் துரைராஜ்-இராஜகுமாரன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்கிறது சிங்கை தேசிய நூலகம்

துரைராஜ்-இராஜகுமாரன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்கிறது சிங்கை தேசிய நூலகம்

1306
0
SHARE
Ad

சிங்கப்பூர்- ஒவ்வோர் ஆண்டிலும் மறைந்த தமிழ் எழுத்தாளர்கள், ஆளுமைகளை நினைவுகூரும் விதமாக  கடந்த ஆண்டுமுதல் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு “நினைவின் தடங்கள்” எனும்  நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2018-ஆம் ஆண்டில் மறைந்த தமிழ் எழுத்தாளர்களான ச.ஞாநி (தமிழ்நாடு), பாலகுமாரன் (தமிழ் நாடு), ம.இலெ. தங்கப்பா, துரைராஜ் (மலேசியா), ஆதி இராஜகுமாரன் (மலேசியா), கூத்துப் பட்டறை ந.முத்துசாமி (தமிழ்நாடு), கலைஞர் மு.கருணாநிதி (தமிழ் நாடு) ஆகிய எழுவர் நினைவுகூரப்பட உள்ளனர்.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை டிசம்பர் மாதம் முதல் தேதியன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தேசிய நூலக வாரியத்தின் ‘தெ போட்’ (The POD) எனும் அரங்கில் நடைபெறும்.

#TamilSchoolmychoice

மேற்கண்ட எழுவரும் எழுத்துத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றி சிறப்புரையாளர்கள் உரை நிகழ்த்துவர்.

மலேசியாவில் பத்திரிக்கைத் துறையிலும், தமிழ் இலக்கியத் துறையிலும் அளப்பரிய பணிகள் ஆற்றிய எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன் இருவரும் நமது அண்டை நாடான சிங்கப்பூரின் தேசிய நூலகத்தின் தமிழ் சேவைகள் பிரிவின் மூலம் நினைவுகூரப்படுவது அவர்களின் தமிழ்ப் பணிகளுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு கௌரவமாகும்.