Home நாடு ஐசெர்ட் பேரணி : பக்காத்தான் ஆட்சிகாலம் சீக்கிரம் முடியவேண்டும் – பிரார்த்தனையுடன் நிறைவு கண்டது

ஐசெர்ட் பேரணி : பக்காத்தான் ஆட்சிகாலம் சீக்கிரம் முடியவேண்டும் – பிரார்த்தனையுடன் நிறைவு கண்டது

1121
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மலாய் – முஸ்லீம் அரசு சாரா இயக்கங்களின் ஏற்பாட்டில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் ஆதரவோடு நடைபெற்ற ஐசெர்ட் (ICERD) எதிர்ப்புப் பேரணி மாலை 5 மணியளவில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

மாலை 4.30 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை கூட்டத்தைக் கலைக்க,பங்கேற்பாளர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர்.

குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்தேறிய இன்றைய பேரணியில் சுமார் 5 இலட்சம் பேர் கலந்து கொண்டதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி பெருமையுடன் கூறினார்.

#TamilSchoolmychoice

எனினும் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரமாக இருக்கும் என மலேசியாகினி மதிப்பிட்டது. காவல் துறையினர் 55 ஆயிரம் பேர் திரண்டிருப்பர் எனக் கணிக்கின்றனர்.

இந்தப் பேரணியில் சாஹிட், பாஸ் தலைவர் ஹாடி அவாங், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் முன்னாள் பிரதமர் நஜிப் ஆகியோர் உள்ளிட்ட பல தலைவர்கள் உரையாற்றினர்.

நடந்து கொண்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் நடப்பு ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இன்றைய பேரணி நிறைவு கண்டது.