Home நாடு சீ பீல்ட்: கலவரம் குறித்து வருத்தம் தெரிவித்த சிலாங்கூர் சுல்தான்

சீ பீல்ட்: கலவரம் குறித்து வருத்தம் தெரிவித்த சிலாங்கூர் சுல்தான்

979
0
SHARE
Ad

கிள்ளான்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் குறித்து வருத்தப்படுவதாகவும், அச்சம்பவம் தமக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாகவும் சுல்தான் ஷாராபூடின் இட்ரீஸ் ஷா, நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11) தனது 73-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூறினார்.    

மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களின் கலாச்சாரங்கள், மதங்கள், மற்றும் அவர்களின் உணர்வுகள் மீது நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது என அவர் கூறினார் .

சிலாங்கூரில் நிகழ்ந்த இச்சம்பவம் என்னை மிகவும் வருந்தச் செய்கிறது. நமது நாட்டிலுள்ள பல்வேறு இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் அவநம்பிக்கை மற்றும் குழப்பத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நாம் இதுவரையிலும் கட்டியெழுப்பிய எல்லாவற்றையும் அழித்து விடக் கூடாதுஎன்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சுல்தான் ஷாராபூடின் மக்களை,குறிப்பாக அரசியல்வாதிகளை, இம்மாதிரியான சம்பவங்களின் போது, தங்கள் சுய நலத்திற்காக அதனை இன, மதப் பிரச்சனைகளாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.