Home நாடு சீ பீல்ட்: மேலும் 9 பேர் கைது

சீ பீல்ட்: மேலும் 9 பேர் கைது

707
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஏற்பட்ட கலவரத்தில் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக ஒரு கல்லூரி மாணவன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் 20 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, நீதிபதி நூர்ஷஹிரா அப்துல் சலீமின் முன் அவர்கள் விசாரணைக் கோரினர்.

குற்றவியல் சட்டம் பிரிவு 148 –ன் கீழ், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அதிகபட்ச சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

#TamilSchoolmychoice

நீதிபதி நூர்ஷஹிரா அவர்களை 6,000 ரிங்கிட் பிணையில் விடுவித்ததோடு, மாதத்திற்கு ஒரு முறை காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.