Home இந்தியா அன்வார் இந்தியாவுக்கு 5 நாள் வருகை – புதுடில்லி வந்தடைந்தார்

அன்வார் இந்தியாவுக்கு 5 நாள் வருகை – புதுடில்லி வந்தடைந்தார்

1892
0
SHARE
Ad
இன்று புதன்கிழமை ராகுல் காந்தியைச் சந்தித்த அன்வார்

புதுடில்லி – பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவுக்கான 5 நாள் வருகையின் தொடக்கமாக நேற்று இந்தியத் தலைநகர் புதுடில்லி வந்தடைந்தார்.

அவருடன் மேலும் 4 மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் வந்துள்ளனர். தனது வருகையின்போது இங்குள்ள இந்திய அரசாங்கத் தலைவர்களையும், பிரமுகர்களையும் அன்வார் சந்தித்து உரையாடுவார்.

நாளை வியாழக்கிழமை ‘ரெய்சினா கலந்துரையாடல்’ ‘(Raisina Dialogue’) என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறும் உயர்மட்டத் தலைவர்களின் கருத்தரங்கத்தில் பங்கு கொண்டு அன்வார் உரையாற்றுவார்.