Home நாடு பகாங் மாநில சுல்தான், மாமன்னராகும் வாய்ப்பு!

பகாங் மாநில சுல்தான், மாமன்னராகும் வாய்ப்பு!

2040
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா (படம்), பகாங் மாநிலத்தின் அடுத்த சுல்தானாக பதவியேற்க இவ்வாரம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பகாங் மாநில அரசு தரப்புக் கூறியுள்ளது.

இவ்வாரம் வெள்ளிக்கிழமை அவர் மாநில சுல்தானாகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வாயிலாக, ஒன்பது மலாய் ஆட்சியாளர்களின் சுழற்சியின் அடிப்படையில், அவர் நாட்டின் 16-வது மாமன்னராக பதவியேற்கும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய பகாங் சுல்தானான, சுல்தான் அகமட் ஷாவிற்கு, இது குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டதாக என்எஸ்டி செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சுழல் முறை அடிப்படையில், கிளந்தானுக்கு அடுத்தப் படியாக பகாங் மாநில சுல்தானுக்கு இவ்வாய்ப்பு தரப்பட வேண்டும். ஆகவே, அதனை மதித்து செயல்படுமாறு பகாங் மாநில அரசு தரப்புக் கேட்டுக் கொண்டது.

ஜனவரி 24-ஆம் தேதி புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம் நடத்தி, தேர்ந்தெடுப்பார்கள் என அரண்மனை முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சேட் டேனியல் சேட் அகமட் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 31-ஆம் தேதி நாட்டின் 16-வது மாமன்னரும், துணை மாமன்னரும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.