Home நாடு பாரதிய திவாஸ் முன்னிட்டு இந்தியத் தூதரகத்தின் சிறப்பு நிகழ்ச்சி

பாரதிய திவாஸ் முன்னிட்டு இந்தியத் தூதரகத்தின் சிறப்பு நிகழ்ச்சி

908
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த மாதம் இந்தியாவின் வாரணாசி நகரில் நடைபெறவிருக்கும் 15-வது பாரதிய திவாஸ் அனைத்துலக மாநாட்டை முன்னிட்டு, கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஜனவரி 09ஆம் தேதி கோலாலம்பூரிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியத் தூதர் ஶ்ரீ மிருதுள் குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை தூதர் நிக்கிலேஷ் கிரி, சமூக விவகார ஆலோசகர் ஶ்ரீ நிஷிட் குமார் உட்பட மலேசியாவிலுள்ள புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளிகள், இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்திய கலாச்சார மையத்தின் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

வாரணாசியில் நடைபெறவிருக்கும் 3 நாள் விழாவை முன்னிட்ட சிறப்பு காணொளி ஒன்று இவ்விழாவில் திரையிடப்பட்ட்து. டாக்டர் ஹர்தேவ் கோர் தலைமையில் ‘வைஷ்னவ் ஜன் பஜன்’ நிகழ்ச்சியும் இடம்பெற்றது. டாக்டர் ஹர்தேவ் கோருக்கு இந்தியத் தூதரின் துணைவியார் ஶ்ரீமதி சுமிதா கோயல் நினைவுப் பரிசினை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, ‘15வது பிரவாசி பாரதிய திவாஸ்’ விழாவினை முன்னிட்டு ‘பாரத் கோ ஜானியே’ புதிர்ப் போட்டியின் முதல் கட்ட வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற 9 பேரில் நால்வர் இறுதி சுற்றுக்குத் தேர்வானதோடு, இந்தியாவில் வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 15 நாட்கள் பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இந்திய தூதர் தமதுரையில், ‘15வது பிரவாசி பாரதிய திவாஸ்’ குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சமூக விவகார ஆலோசகர் ஶ்ரீ நிஷிட் குமார் வருகை புரிந்த அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஜனவரி 21ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை வாரணாசியில் விமரிசையாக நடைபெறவுள்ள ‘15வது பிரவாசி பாரதிய திவாஸ்’ நிகழ்ச்சியில் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுவார். இவ்வாண்டு பிரவாசி பாரதிய சம்மன் விருது அதிபர் ஶ்ரீ ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு வழங்கப்படும்.