Home உலகம் மதவாதத்தை தூண்டுகிறது அரசு -மக்கள் இயக்கம்

மதவாதத்தை தூண்டுகிறது அரசு -மக்கள் இயக்கம்

532
0
SHARE
Ad

monkஇலங்கை, ஏப்ரல் 2- இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

நேற்று  திங்கட்கிழமை கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அந்த அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

#TamilSchoolmychoice

நாட்டில் பௌத்த பிக்குகளின் தலைமைப் பீடங்கள், இனவாத பிரச்சாரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கவேண்டும்.

மீண்டும் 1983-ம் ஆண்டில் நாட்டில் நடந்ததைப் போன்ற இனக்கலவரத்துக்கு இடமளிக்கக் கூடாது என்று தேரர் கேட்டுக்கொண்டார். பலசேனா என்ற பெயர்களுடன் செயற்படுகின்ற பல்வேறுபட்ட பௌத்த கடும்போக்கு அமைப்புகளை அரசாங்கம் தனக்கு வாக்குசேர்க்கும் சக்திகளாக பயன்படுத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஹலால் குறியீடுகளை நீக்கிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்துக்கொண்டும் போலிஸ்  மற்றும் இராணுவத்தின் அதிகாரம் தமக்கு இருப்பதாக கோசமிட்டுக்கொண்டும் எவ்விதத் தடையுமின்றி செயற்படுகின்ற அமைப்புக்குப் பின்னால் இருக்கும் சக்தி என்னவென்று தெரியாதா? என்றும் கேள்வி எழுப்பினார்.