Home இந்தியா மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் 2 மதிப்பெண்கள்! செங்கோட்டையன்

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் 2 மதிப்பெண்கள்! செங்கோட்டையன்

782
0
SHARE
Ad

சென்னை: இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பலர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், மரக்கன்றுகளை நடுவது போன்ற மிக எளிதான செயலினால் கிடைக்கப் பெறும் நன்மையானது மிகப் பெரிது.

இதனை சிறப்பான முறையில் மேலும் துரிதப்படுத்துவதற்கு, தமிழகத்தில், வரும் கல்வியாண்டு முதல் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 12 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அதிமுக அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கல்வித்துறைக்காக சிறப்பாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பிற்குப் பின்னர் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.