Home இந்தியா சவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை!

சவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை!

1265
0
SHARE
Ad

புது டெல்லி: பாகிஸ்தானுக்கான தனது அரசு வருகையை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் முகமட் சல்மான் அரசுமுறை பயணமாக இன்று புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்தடைந்த அவரை பிரதமர் மோடி வழக்கமான மரபுகளை மீறி நேரில் சென்று வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திந்துப் பேசிய இளவரசர் சல்மான், இந்தியா மற்றும் சவுதி நாடுகளுக்கிடையே நன்மைத் தரக்கூடிய செயல்களை ஏற்படுத்தும் திட்டங்களை ஏற்படுத்துவோம் என உறுதிக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், சவுதி இளவரசரும் சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பில் புல்வாமா தாக்குதலினால் இந்தியா, பாகிஸ்தான் உறவில்  ஏற்பட்ட விரிசல் குறித்தும், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படும் என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும், இந்தியாவுக்கும் சவுதிக்கும் இடையே பாதுகாப்பு, மருத்துவம், எண்ணெய் முதலீடு  சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேசப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.