Home கலை உலகம் ஆஸ்கார் விருது நிகழ்ச்சி: நேரடி ஒளிபரப்பு இல்லை!

ஆஸ்கார் விருது நிகழ்ச்சி: நேரடி ஒளிபரப்பு இல்லை!

1133
0
SHARE
Ad

ஹாலிவுட்: 2019-ஆம் ஆண்டுக்கான 91-வது ஆஸ்கார் அகாடமி விருது நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மலேசியா உள்பட கிழக்காசியப்பகுதிகளில் வேறு எந்த நாட்டிலும் நேரலையாக ஒளிபரப்பப்படவில்லை.

பொதுவாக, ஆஸ்கார் விருது நிகழ்ச்சி, அஸ்ட்ரோவில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இம்முறை, அதன் செலவினங்கள் அதிகம் எனும்படியாலும், தொலைக்காட்சி வழி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாலும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை.

இம்முறை, ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், 8 படங்கள் சிறந்த படங்களுக்கான தேர்வில் மோதுகின்றன. இந்தப் பிரிவில், நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரித்தரோமா’ (Roma) என்ற படம் சிறந்த படத் தேர்வுக்காக மோதுகிறது. கையடக்கக் கருவிகள் மற்றும் இணையம் வழி கட்டணம் செலுத்தி திரைப்படங்களை ஒளிபரப்பும் நெட்பிலிக்ஸ் தயாரித்த இந்தப் படம் திரையரங்குகளில் ஒருவாரம் திரையிடப்பட்டது.

#TamilSchoolmychoice

மற்றொரு சிறந்த படமாகக் கருதப்படும்தி பேவரிட்’ (The Favourite) என்ற படமும் 10 ஆஸ்கார் பரிந்துரைகளைப் பெற்றிருக்கிறது.

ஒரு சூப்பர் ஹீரோ கதையானபிளேக் பெந்தர்’ (Black Panther) என்ற படமும் சிறந்த படத்திற்கான போட்டியில் குதிக்கிறது. வணிக ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ படமான பிளேக் பெந்தர் சிறந்த படத்திற்கான போட்டியில் குதிப்பது இதுவே முதன் முறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருதுகள் குறித்த மேலும் செய்திகள் செல்லியலில் தொடர்ந்து இடம்பெறும்.