Home கலை உலகம் ஆஸ்கார்: சிறந்த ஆவணப்படமாக இந்தியப் படம் அறிவிப்பு!

ஆஸ்கார்: சிறந்த ஆவணப்படமாக இந்தியப் படம் அறிவிப்பு!

1049
0
SHARE
Ad

ஹாலிவுட்: இந்திய நாட்டைச் சேர்ந்த ‘பீரீயட்தி என்ட் ஆப் சென்டென்ஸ்’ (Period: The End of Sentence )  ஆவணப்படம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் போட்டியில் சிறந்த ஆவணப்படம் பிரிவில் வெற்றிப் பெற்றுள்ளது. இம்முறை பரிந்துரைக்கப்பட்ட ஒரே ஓர் இந்தியத் ஆவணப்படமாக இப்படம் அமைந்துள்ளது. இந்தியஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இப்படத்தினை இயக்கியிருந்தார்.

மாதவிடாய் பற்றிய கருத்தினை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாதவிடாய் குறித்து இந்தியப் பெண்களிடையே நிலவும் தவறுதலான கருத்துகளையும், புரிதல்களையும் சித்தரிக்கும் வண்ணமாகப் படம் நகர்த்தப்பட்டிருக்கிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் அணையாடைகளை (நேப்கின்களைகுறைந்த விலைகளை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுப்பிடித்து,  அக்காலக்கட்டத்தில் ஏழை எளிய பெண்களுக்கு சுகாதாரமான முறையில் இருப்பதற்கு பெருமளவில் உதவி புரிந்தவர். இவரது இந்த முயற்சியைக் கருப்பொருளாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ராய்கா ஜேடாப்ச்சி மற்றும் மெலிசா பெர்டன் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டனர்.